எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது.

எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது. எழுத்திடம் பிடித்ததே, அது கண்ணைப் பார்த்து மட்டும் தான் பேசும். ஜெயிக்கிறதுங்கிறது வாழ்க்கையில்ஏழைமக்களுக்கு ஒரு வேளை சாப்பாடாகவும்,பணக்காரனுக்கு பல கோடிசொத்தாகவும் உள்ளது. பணக்கார குழந்தையா இருந்தாலும் வீடு வரையச்சொன்னா குடிசை வீடோ அல்லது ஓட்டு வீடோ தான் வரையிது. குழந்தைகள் டம்ளரில் பால் குடித்து முடிந்ததும் மீசை வளர்ந்து விடுகிறது. உலகினில் எவருமில்லை சைவமென!தாய்ப்பாலென்ன தாவரத்திலிருந்தா கிடைக்கிறது? தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும், அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கும் சமுதாயம் உள்ளவரை என் நாடு சுத்தம் ஆகாது. சிறகுகள் இல்லாமலேயே, பெண்களை தேவதைகளாக்கும் வல்லமை புடவைகளுக்கு உண்டு. விலைவாசி - பெயர் சரியாத்தான் வச்சிருக்காங்க , சில இடங்களில் விலை வாசிக்க மட்டுமே முடியும். ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது ஒரு தீகுச்சியின் மரணம். உன் இறுதிவரை நீ இழப்பதற்கு ஏதாவது ஒன்று மிச்சமிருக்கும் கவலை கொள்ளாதே . இந்த படிப்ப கண்டுபுடிச்சது எவன்டா" என ஆரம்பித்து."இந்த பணத்த கண்டுபுடிச்சது எவன்டா" என விடையில்லா கேள்விகளோடு முடிகிறது வாழ்க்கை. வேலைக்குப் போகிறவர்களின் திங்கட் கிழமையை விட வேலை கிடைக்காதவர்களின் திங்கட் கிழமைகள் கொடூரமானவை. ஒரு முதலாளியை \'\'வேலையை விட்டுட்டு போயிடுவேன்\'\'னு மிரட்டுர அளவுக்கு வேலை செய்யனும் அதான் திறமை. அடுத்த வாக்கியம் பொய்.முந்தய வாக்கியம் உண்மை.இதுல எது உண்மை?எது பொய்?அதுதான் கடவுள். 500 ரூபாயை எண்ணினாலும், 50000 ரூபாயை எண்ணினாலும் ஒரே மாதிரி சத்தத்தோடு நடந்து கொள்ளும்"ஏடிஎம்" மெசின்.ஏன்னா அது மெசின், மனிதன் இல்லை. என்னதான் பெரிய மனுஷனா இருந்தாலும் ஐஸ்கிரீம் மேல இருக்கற அட்டைய ஒரு தடவ நக்கிட்டு தான் தூக்கி போட்றாங்க. இவன் என்ன நினைப்பான் அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம். ஆனா உண்மையில ஒருத்தனும் நம்மளைப் பத்தி நினைக்கிறதேயில்ல. சத்தம் போட்டு அழ எல்லோருக்கும் ஒரு காரணம் நிச்சயம் இருக்கும், ஆனால் வாய்ப்பு நிச்சயம் இருக்காது. இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டுமே என்ற கவலை சிலருக்கு, இப்படியே இருந்துவிடுமோ என்ற கவலை சிலருக்கு. 250 ரூபாய்க்கு பளிச்சென்றும், 100 ரூபாய்க்கு சுமாராகவும், இலவச தரிசனத்திற்கு படுமங்கலாகவும் காட்சி தருகின்றார் கடவுள். மொபைல் போனை முதலில் வைத்திருந்தவர்கள் ஆச்சர்யப்பட்டார்கள். இப்போது வைத்திருக்காதவர்கள் ஆச்சர்யப்படுத்துகிறார்கள். கோடிகளில் சம்பாதித்து நடிகன் செய்யும் உதவிகள், டீக்கடையில் பிச்சைக்காரனுக்கும் சேர்த்து டீ சொல்லும் தினக்கூலியின் வள்ளல்தனத்துக்கு கீழேதான். கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட படியால். கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும் தெரிவதில்லை. கொட்டும் "மழையில்" இரண்டு விதமான பிள்ளைகள்.1. மாம்.இட்ஸ் ரைனிங்.ஏசியை கம்மி பண்ணுங்க.2. அம்மா.இங்கேயும் ஒழுகுது
பாத்திரம் எடுத்துட்டு வா.

Post a Comment

0 Comments